Categories
தேசிய செய்திகள்

பூஸ்டர் தடுப்பூசி இலவசம்: 42 நாட்களில் இவ்வளவு பேருக்கு போட்டாச்சா?…. மத்திய அரசு தகவல்….!!!

நம் நாட்டில் 65வயதை கடந்தவர்கள் மற்றும் முன் கள, சுகாதார பணியாளர்கள் ஆகியோருக்கு பூஸ்டர் தடுப்பூசியானது செலுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் சுதந்திர தின அமுத பெருவிழாவை முன்னிட்டு 75 தினங்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி இலவசம் எனும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. அதன்படி சென்ற ஜூலை 15-ஆம் தேதி துவங்கிய இந்த திட்டம் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும். இதற்காக நாடு முழுதும் பேருந்து, ரயில் நிலையங்கள், விமானம் நிலையங்கள், பள்ளி, கல்லூரிகள், மதவழிபாட்டு தலங்கள் ஆகிய இடங்களில் சிறப்பு முகாம்கள் அமைத்து பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டம் துவங்கி நேற்றுடன் 42வது நாள் ஆகும். இந்த 42 தினங்களில் 9 கோடியே 60 லட்சம் பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்ததிட்டம் தொடங்குவதற்கு முன் நாளொன்றுக்கு 11 லட்சத்து 40 ஆயிரம் டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டு வந்தது. அது சராசரியாக 27 லட்சத்து 77 ஆயிரமாக அதிகரித்து இருக்கிறது. அதுபோன்று நாளொன்றுக்கு சராசரியாக செலுத்தப்படும் பூஸ்டர் தடுப்பூசிகள் 22 லட்சத்தை கடந்துள்ளது.

விழிப்புணர்வு பிரசாரத்தால் பூஸ்டர்தடுப்பூசி போடுவது அதிகரித்துள்ளதாக மத்திய அரசானது தெரிவித்துள்ளது. பிரதமர் மோடியின் உறுதியான, முற்போக்கான தலைமையின் கீழ் நாட்டின் கூட்டு மன உறுதியை இது காட்டுவதாக மத்திய சுகாதாரத் துறை மந்திரி மன்சுக்மாண்டவியா தெரிவித்துள்ளார். இத்திட்டத்தின் முன்னேற்றத்தை அவர் உன்னிப்பாக கண்காணித்துவந்தார். இதனிடையில் பூஸ்டர் தடுப்பூசிக்கு அனுமதிக்கப்பட்ட தடுப்பூசிகள் பட்டியலில் “கோர்பேவேக்ஸ்” சேர்க்கப்பட்டுள்ளது.

Categories

Tech |