கடந்த அக்டோபர் 31ம் தேதி சீனாவின் தெற்கே வென்சாங் பகுதியில் இருந்து சுமார் 23 ஆயிரம் கிலோ எடை கொண்ட ராக்கெட்1 விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. அதில் சீனாவின் கட்டுமான பணியில் உள்ள டியான் காங் விண்வெளி நிலையத்திற்கு தேவையான மெங்சியான் எனும் உபகரணங்களின் தொகுதி புவி வட்டப்பாதை அனுப்பப்பட்டுள்ளது. இதன்பின் அந்த ராக்கெட் ஆனது மீண்டும் புவியை நோக்கி விழுகின்றது ஆனால் இந்த லாங் மார்ச் 5பி என்னும் ராக்கெட் ஆனது பூமியின் எந்த பகுதியில் சரியாக விழும் என்ற தகவல்களை சீனா இதுவரை உறுதி செய்யவில்லை.
இந்த நிலையில் இந்த ராக்கெட் ஆனது மீண்டும் பூமிக்கு திரும்பும்போது வளிமண்டலத்தில் எரிந்து சாம்பலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருந்த போதிலும் கடந்த கால கட்டங்களில் சீனா ராக்கெட் குப்பைகளில் சில முழுவதும் எறியாமல் அதன் பாகங்கள் பூமியில் விழுந்த அதிர்ச்சியான சம்பவங்களும் நடைபெற்று உள்ளது. இந்த நிலையில் இந்த முறை மீண்டும் அதுபோன்ற சம்பவங்கள் நடப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது என விஞ்ஞானிகள் அச்சம் தெரிவித்திருக்கின்றனர். மேலும் இது பற்றி விண்வெளி கழகத்தின் தலைமை பொறியியலாளர் அலுவலகத்தின் ஆலோசகர் டெட் மியூல் ஹாப்ட் பேசும் போது சீனா மீண்டும் இதுபோல செயல்படுகிறது.
இதனால் 88 சதவிகித உலக மக்களின் வாழ்க்கை மிகப்பெரிய ஆபத்தில் இருக்கிறது. மேலும் சீனாவின் விண்வெளி குப்பைகள் பூமியில் விழும் சூழலில் 700 கோடி மக்கள் ஆபத்தில் இருக்கின்றனர் என தெரிவித்திருக்கிறார். இருப்பினும் தனிநபர் என வரும்போது இது மிகவும் குறைந்த அளவிலான ஆபத்தே என விண்வெளி கழகத்தின் நிபுணர்கள் குழு கூறியுள்ளது. மேலும் இதற்கு முன்பாக இதே போல் சீன ராக்கெட்டின் மீதமுள்ள பாகங்கள் மலேசியா, இந்தோனேசியா உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. ராக்கெட் எந்த பகுதியில் பூமியில் விழும் என்பது பற்றி சரியான தகவல்களை சீனா கூறவில்லை என அப்போது மேற்கத்திய மற்றும் ஆசிய நாடுகள் கடுமையான கண்டனம் தெரிவித்திருக்கிறது.