Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பூனைக்கு பால் வைக்க சென்ற வாலிபர்…. திடீரென நடந்த சம்பவம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

மாடியில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்திலுள்ள திருவான்மியூர் கிழக்கு கடற்கரை சாலையில் தங்கராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரேம்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் பிரேம்குமார் கடந்த இரண்டு ஆண்டுகளாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் பிரேம்குமார் பூனைக்கு பால் வைப்பதற்காக வீட்டின் 3-வது மாடிக்கு சென்றுள்ளார்.

அப்போது எதிர்பாராதவிதமாக மாடியிலிருந்து தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்த பிரேம்குமாரை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |