Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

புழல் ஜெயில் கைதி திடீர் மரணம்… இறப்புக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை…!!

சென்னை அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் புழல் ஜெயில் கைதி சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் உயிரிழந்தார்.

கடலூர் மாவட்டம், அம்பேத்கர் நகர் பெரிய தெருவில் வசித்து வந்தவர் லோகேஷ் என்ற சந்தோஷ் (27). இவர் பாலியல் பலாத்கார வழக்கு சம்பந்தமாக சேத்தியாதோப்பு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிதம்பரம் கிளை ஜெயிலில் அடைக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் இவருக்கு தீராத வயிற்று வலி இருந்து வந்தது. அதனால் அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதனையடுத்து மேல் சிகிச்சைக்காக கடந்த 23 ஆம் தேதி அன்று புழல் சிறைக்கு மாற்றப்பட்டு பின் சென்னை அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிந்து இவரின் இறப்புக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |