வேலூரில் உள்ள 160 ஆண்டுகள் பழமை அந்த ஊரீசுப்பள்ளி இயங்கிக் கொண்டு வருகிறது. இப்பள்ளியில் மாணவர்கள் பலரும் தலைமுடியை சரியாக வெட்டி வருவதில்லை. ஒவ்வொரு பள்ளியிலும் மாணவர்கள் ஒழுக்கமாக சீருடை அணிந்து, தலை முடியை வெட்டிருக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் சுற்றறிக்கையின்படி மாணவர்கள் பெரும்பாலும் தலை முடியை சரியாக வெட்டாமல் பல புள்ளிங்கோ கட்டிங், ஸ்பைக் கட்டிங் என விதவிதமாக ஸ்டைலாக முடியை வெட்டி வருகின்றனர். இவ்வாறு ஸ்டைலாக முடியை வெட்டி வந்த 65 மாணவர்களை கண்டறிந்து பள்ளி தலைமையாசிரியர் எபினேசர் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் அவர்களை எச்சரித்து அறிவுரை வழங்கினார்.
அதன் பிறகும் அவர்கள் தலைமுடியை சரியாக வெட்டி வரவில்லை. இதனால் தலைமையாசிரியர் தனது சொந்த செலவில் முடிதிருத்துபவர்களை பள்ளிக்கு வரவழைத்து ஸ்டைலாக முடியை வெட்டி இருந்த மாணவர்களின் தலைமுடியை சீர்திருத்தினர். இதுகுறித்து தலைமை ஆசிரியர் செய்தியாளர்களிடம் கூறியது, மாணவர்கள் தலைமுடியை சரியாக வெட்டாமல் வந்துள்ளனர். ஒழுக்கமாக மாணவர்கள் இருக்க வேண்டும். ஒழுங்காக தலைமுடியை விட வேண்டும் என மாவட்ட ஆட்சியரின் உத்தரவுப்படி, அவர்களின் தலைமுடி சீர்திருத்தினோம். இது குறித்து அவர்களின் பெற்றோர்களை வரவழைத்த அவர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.