Categories
சினிமா

புரூஸ் லீ திடீர் இறப்பு…. பின்னணி என்ன?…. 50 வருஷத்துக்கு பின்….. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…..!!!!

குங்பூ தற்காப்பு கலை இன்று உலக அளவில் மிகவும் பிரபலமாக தெரிய முக்கியமான காரணமாக உள்ள நட்சத்திரங்களில் ஒருவர் புரூஸ் லீ. சீனவம்சாவளியை சேர்ந்த இவர் அமெரிக்காவின் கலிபோர்னியாவிலுள்ள சான் ஃப்ரான்சிஸ்கோவில் பிறந்தார். சிறுவயதிலே தன் குங்ஃபூ கலையில் மாற்றங்களை கொண்டு வந்த இவர் திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சி என பெரியளவில் பிரபலமாகினார். புரூஸ்-லீ முதல் படமான தி பிக்பாஸ் சென்ற 1971ஆம் வருடம் வெளியாகியது.

பெரிய வசூல் சாதனையை படைத்த இந்த படம் ஆசியாவில் மட்டும் 12 மில்லயன் டாலர்கள் வரை வசூலித்தது. அத்துடன் கடைசியாக இவர் நடிப்பில் எண்ட்ர் தி டிராகன் படம் வெளியானது. எனினும் இந்த படம் வெளியாகுவதற்கு முன்பே புரூஸ்-லீ இறந்துவிட்டார். தலைவலி காரணமாக தூங்க சென்ற புரூஸ்-லீ பிறகு நினைவு திரும்பாமலே மருத்துவமனையில் 32-வயதில் மரணம் அடைந்தார். இதனால் இவரின் இறப்பு மர்மம் நிறைந்து இருந்தது.

இந்த நிலையில் இவரின் மரணம் தொடர்பாக 50 வருடங்களுக்கு பின் கிளினிக்கல் ஜர்னல் என்ற புத்தகத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது. அவற்றில் புரூஸ் லீயின் மூளை பெரிதாகி அவர் இறந்துவிட்டதாக கூறப்பட்டு உள்ளது. இதனிடையில் புரூஸ் லீ உடற் பயிற்சிகாக அதிக புரோட்டின்கள் எடுப்பார். இதனால் தாகம் காரணமாக அதிகளவு தண்ணீர் எடுத்துள்ளார்.

அதிகளவு தண்ணீரை சிறுநீராக பிரிக்கும் சக்தியை அவரின் சிறுநீரகம் பெற்றிருக்கவில்லை. இதன் பின் விளைவாக மூளையில் நீர்விக்கம் ஏற்பட்டு எடை கூடி இருக்கிறது. மனித மூளையின் எடையானது சராசரியாக 1400 கிராம் இருக்கும். ஆனால் புரூஸ் லீயின் மூளையானது 1575 கிராம் பெரியதாகி விட்டது. இதனால் அவருக்கு திடீரென்று இறப்பு ஏற்பட்டுள்ளது. இது அவருடைய பிரேத பரிசோதனையில் தெரியவந்தது என அப்புத்தக்கத்தில் கூறப்பட்டிருக்கிறது.

Categories

Tech |