கிருஷ்ணகிரியில் பேரறிஞர் அண்ணாவின் 114 வது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக சார்பில் பொது கூட்டம் நடைபெற்றது. இதில் வேப்பனஹள்ளி சட்டமன்ற உறுப்பினர் கே.பி.முனுசாமி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், அம்மாவுடன் இருந்த சசிகலாவோடு இருக்கும் உறவுகளுக்கும், அவர்களுக்கு துதி பாடுபவர்களுக்கும், அவர்களுக்கு கப்பம் கட்டுபவர்களுக்கு தான் வாய்ப்பு கிடைக்கும் என்பதை உணர்ந்த நான் அப்போதே சசிகலாவே எதிர்த்து முதலில் குரல் கொடுத்தவன். அம்மா ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சசிகலாவை முதல்வராக்க முயற்சி செய்தபோதும் எதிர்ப்பு தெரிவித்து ஓபிஎஸ் அணியில் இணைந்தேன். சசிகலாவை கட்சியில் சேர்க்கக்கூடாது என்று கூறியதற்கு, ஒபிஎஸ் ஆமாம் எனக்கு உடன்பாடு என கூறினார். அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு மேடையிலும் குடும்ப ஆட்சி வந்து விடக்கூடாது என ஓபிஎஸ் வாயால் சொல்ல வைத்தேன். தர்மயுத்தம் வந்ததே எடப்பாடிக்கு எதிராக இல்லை.
இந்த கருங்காலி உள்ளே புகுந்து விடக்கூடாது என்பதற்காகத்தான். இந்த போராட்டத்தை துவங்கினோம். அதில் அவர் தலைமையெற்றார் அவருடன் நான் இருந்தேன். சசிகலாவே முதல்வர் ஆக்கினால் நான் கட்சியிலிருந்து வெளியேறி விடுவேன் என்று கூறினோம். இதனையடுத்து வைத்தியலிங்கத்திற்கு ஒரு பிரச்சனை என்றால் தஞ்சாவூர் மாவட்டத்தில் அவரால் அரசியல் செய்ய முடியவில்லை. சசிகலா, டிடிவி தினகரனை எதிர்த்து அரசியல் செய்ய முடியவில்லை. இதனால் அவர் சசிகலாவுடன் இணைய முயற்சி செய்கிறார்ம் நான் அரசியலுக்காக சசிகலா வரக்கூடாது என கூறவில்லை. ஒட்டுமொத்த அரசியலுக்கும் சசிகலா வரக்கூடாது என்று கூறுகிறேன். புரட்சித்தலைவி அம்மா இருக்கும்போது பொது குழுவிலேயே நான் பேசினேன், வைத்தால் பிள்ளையார் எடுத்துப் போட்ட சாணி என அப்போது அம்மா என்னை ஆச்சரியமாக பார்த்தார். எனக்கு நடிக்க தெரியாது அப்போதிலிருந்து தற்போது வரை ஒரே கருத்தைதான் சொல்லுகிறேன். சசிகலா இணைய கூடாது என தற்போது ஓபிஎஸ் வெளியேறி பல்வேறு கருத்துகளை சொல்லி வருகிறார் என்று தெரிவித்துள்ளார்.