உடலில் எப்போதும் புத்துணர்ச்சியை ஏற்படுத்தும் வெள்ளரியை தினமும் சாப்பிடுவது மிகவும் நல்லது.
தற்போதைய காலகட்டத்தில் ஒரு சின்ன தலைவலி என்றால் கூட அனைவரும் மாத்திரையை தான் தேடுகிறார்கள். ஆனால் நம் முன்னோர்கள் காலத்தில் இயற்கை மருத்துவங்கள் அனைத்து நோய்களுக்கும் உதவின. அதனை நாம் அனைவரும் இப்போது மறந்துவிட்டோம். அவ்வாறு உடலிலுள்ள பல பிரச்சனைகளுக்கு இயற்கை மருத்துவமே மிக சிறந்தது. அதன்படி சில பழங்கள் மற்றும் காய்களில் இயற்கையாகவே அதிக அளவு சத்துக்கள் நிறைந்துள்ளன.
அவ்வாறு வெள்ளரிக்காயில் உள்ள நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். வாயின் மேற்பகுதியில் ஒரு வெள்ளரி வில்லையை வைப்பதன் மூலம் வாய் துர்நாற்றத்திற்கு காரணமான பாக்டீரியாக்களை அழிக்க முடியும். துர் நாற்றத்திற்கு காரணமாக கூடுதல் வயிற்று வெப்பத்தை வெள்ளரி விடுவிக்கிறது. வாய்க்கு புத்துணர்வை தருகிறது. வெள்ளரி சாறு உடலுக்கு புத்துணர்வு அளிப்பதுடன் பாதிக்கப்பட்ட ஈறுகளையும் குணப்படுத்துகிறது. இதனால் புத்துணர்வு சுவாசத்தை உணர முடியும். அதனால் இதனை தவறாமல் சாப்பிடுங்கள்.