Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

புத்தாண்டையொட்டி…. மீனவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. சிறை நீட்டிப்பு செய்து உத்தரவு….!!

இலங்கை சிறையில் அடைக்கப்பட்ட 43 மீனவர்களை மீண்டும் ஜனவரி 13ஆம் தேதி வரை சிறை நீட்டிப்பு செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து 6 விசைப்படகுகளில் 43 மீனவர்கள் கடந்த 18ஆம் தேதி மீன் பிடிக்க நடுக்கடலுக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் இலங்கை கடற்படையினர் அவர்களை எல்லையை தாண்டி வந்ததாக கூறி 43 பேரையும் கைது செய்துள்ளனர். இதனையடுத்து கடந்த 10 நாட்களுக்கும் மேலாக மீனவர்களை யாழ்பாணம் சிறையில் அடைத்து வைக்கப்பட்ட நிலையில் மீண்டும் அவர்களை நேற்று ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.

அப்போது விசாரித்த நீதிபதி மீனவர்கள் 43 பேரையும் வருகின்ற ஜனவறு 13ஆம் தேதி வரை சிறையில் அடைக்கும்படி உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் இலங்கையில் சிறை பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் புத்தாண்டையொட்டி விடுவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்த்து கொண்டிருந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு, காவல் நீட்டிப்பு செய்தது மிகுந்த வேதனையை அளித்துள்ளது.

Categories

Tech |