Categories
மாநில செய்திகள்

புத்தாண்டு கொண்டாட்டம்…. தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் அமல்…. அரசு அதிரடி….!!!!

தமிழகத்தின் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் படிப்படியாக அரசு தளர்வுகளை அறிவித்துக் கொண்டே வருகிறது. இதனிடையே கொரோனா வகை உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. அந்த வைரஸ் தமிழகத்திலும் பரவி உள்ளது. அதனால் மற்ற மாநிலங்களைப் போல தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இந்நிலையில் மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை முறையாக பின்பற்ற வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி உள்ளது.

இதனை தொடர்ந்து புத்தாண்டு பண்டிகையின் போது பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. அதாவது மெரினா மற்றும் பென்சன் கடற்கரை பகுதியில் பொதுமக்கள் செல்வதற்கு மற்றும் டிசம்பர் 31 காலை 9 மணி முதல் மெரினா கடற்கரை-காமராஜர் சாலை வரை வாகனங்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து பொது இடங்களில் வாகனங்களை நிறுத்தி பண்டிகையை கொண்டாட்டம் மற்றும் விடுதிகள் பண்ணை வீடுகளில் இசை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் தங்கும் வசதியுடன் கூடிய உணவகங்கள் இரவு 11 மணிக்கு மேல் இயங்குவதற்கு தடை தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

Categories

Tech |