சென்னை மாங்காட்டில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது இயக்குனர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெருமளவு பாதிக்கப் பட்டதால், ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இதனையடுத்து கடற்கரை சாலைகள் மற்றும் விடுதிகளில் புத்தாண்டு கொண்டாடுவதற்கு தமிழக அரசு தடை விதித்திருந்தது. இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. இரவு நேரத்தில் பாதுகாப்பு பணியில் பலத்தை போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
இதனையடுத்து சென்னை மாங்காட்டில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் சின்னத்திரை உதவி இயக்குனர் ருத்ரன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அடுக்குமாடி குடியிருப்பில் சின்னத்திரை உதவி இயக்குனர்கள் 4 பேர் மது அருந்தி புத்தாண்டு கொண்டாடியுள்ளனர். போதை அதிகமான நிலையில் புகைப்பிடிக்கும் போது ஏற்பட்ட மோதலால் ருத்ரன் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.