Categories
மாநில செய்திகள்

புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகள்…. சென்னை போலீசார் அதிரடி….!!!!

தமிழகத்தின் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் படிப்படியாக அரசு தளர்வுகளை அறிவித்துக் கொண்டே வருகிறது. இதனிடையே கொரோனா வகை உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. அந்த வைரஸ் தமிழகத்திலும் பரவி உள்ளது. அதனால் மற்ற மாநிலங்களைப் போல தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.

இந்நிலையில் மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை முறையாக பின்பற்ற வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி உள்ளது. இதனை தொடர்ந்து புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது பொதுமக்கள் ஒன்று கூடுவதை தவிர்க்க கூடிய வகையில் டிசம்பர் 31ஆம் தேதி ஓட்டல்களில் இரவு 11 வரை மட்டுமே செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று சென்னை போலீசார் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |