Categories
உலக செய்திகள்

புத்தாண்டின் போது…. சாலையில் நடந்து சென்றவருக்கு…. நேர்ந்த துயரம்…!!

நபர் ஒருவர் புத்தாண்டு தினத்தில் கார் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

லண்டனில் உள்ள Earls court என்ற பகுதியில் புத்தாண்டு அன்று அதிகாலை 4 மணியளவில் paul campbell என்ற 40வது வயதுடைய நபர் சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது அதி வேகமாக வந்த கார் ஒன்று எதிர்பாராதவிதமாக அவர் மீது மோதியுள்ளது. இதனைத்தொடர்ந்து அந்த கார் நிற்காமல் சென்றுள்ளது. இதுகுறித்து உடனடியாக அவசர உதவி குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து விரைவாக சம்பவ இடத்திற்கு வந்த அவசர உதவிக்குழுவினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக விசாரணை நடத்தி வந்த காவல்துறையினர் 23 வயதுதய இளைஞர்கள் இருவரை கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தங்களிடம் தகவல் தெரிவிக்குமாறு காவல்துறையினர் கூறியுள்ளனர்.

Categories

Tech |