Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

புதையலுக்கு ஆசைப்பட்டு….குழந்தைகளை பலிகொடுக்க முயன்ற குறிசொல்லும் தாய் …. காப்பற்றிய அக்கம் பக்கத்தினர்…!!

திருவள்ளூரில் பெற்ற குழந்தைகளை நரபலி கொடுக்க முயன்ற தாய் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் அருகே திருத்தணி சேர்ந்தவர் ஜெயந்தி (34 வயது). இவருக்கு இரண்டு மகள்கள் ஒரு மகன் உள்ளனர். ஜெயந்தி வாரத்தில் மூன்று நாட்கள் சாமியாடி குறி சொல்லும் வேலையை செய்து வருகின்றார். அவ்வாறு குறி சொல்லும் போது அவர் கோழி போன்ற பிராணிகளை பலி கொடுத்து பூஜை செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இதனையடுத்து ஜெயந்தி தனது வீட்டில் புதையல் இருப்பதாக நினைத்துள்ளார். இதனால் தனது மூன்று குழந்தைகளையும் வைத்து பூஜை செய்து  நரபலி கொடுத்தால் அந்த புதையலை எடுத்துக் கொள்ளலாம் என்று தவறாக எண்ணியுள்ளார். அதுமட்டுமின்றி பூஜை செய்வதற்க்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்தும் வந்துள்ளார்.

அவரின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் 181 என்ற பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு சேவை எண்ணுக்கு தொடர்புகொண்டு ரகசிய தகவல் தெரிவித்துள்ளனர். இத்தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி கிடைத்த தகவல் உண்மை என்பதை அறிந்த அவர்கள் ஜெயந்தி இடமிருந்து மூன்று குழந்தைகளையும் மீட்டுள்ளனர். இதனையடுத்து ஜெயந்தியை கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |