Categories
அரசியல் சற்றுமுன் புதுச்சேரி மாநில செய்திகள்

புதுவை அமைச்சரவை ராஜினாமா…! ஆளுநர் முடிவெடுப்பார்…. மக்கள் தண்டனை கொடுப்பாங்க …!!

புதுவை காங்கிரஸ் அரசு கவிழ்க்கப்பட்டதை தொடர்ந்து மாநில அமைச்சரவை ராஜினாமா செய்துள்ளது.

புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்ததால் அரசு பெரும்பான்மையை இழந்தது. இதனால் புதுச்சேரி முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை சந்தித்து ராஜினாமா கடிதத்தை கொடுத்த பின்பு செய்தியாளரிடம் பேசிய புதுவை முதல்வர் நாராயணசாமி,

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினரின் உரிமையை பறித்து, நியமன உறுப்பினர்கள் மூன்று பேரை நியமித்து, அவர்கள் மூலமாக ஆட்சிக் கவிழ்ப்பு செய்த பாரதிய ஜனதா கட்சியும், அவர்களுக்கு உறுதுணையாக இருக்கின்ற என்ஆர் காங்கிரஸ் கட்சியும்,  அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தையும் புதுச்சேரி மாநில மக்கள் அவர்களுக்கு தகுந்த தண்டனையை வருகின்ற சட்டமன்ற தேர்தலில் கொடுப்பார்கள்.

புதுச்சேரி அமைச்சர் இராஜினாமா செய்வதாக துணைநிலை ஆளுநரும் கடிதம் கொடுத்துள்ளோம் என்றும் நாராயணசாமி தெரிவித்தார். மேலும், நியமன உறுப்பினர்களுக்கு வாக்களிக்க உரிமை இல்லை என்று நாங்கள் சொன்னோம். அதை சபாநாயகர் ஏற்றுக் கொள்ளாத காரணத்தால் அவையில் இருந்து வெளிநடப்பு செய்து விட்டு தற்போது ஆளுநரை சந்தித்து அமைச்சரவை ராஜினாமா செய்யும் முடிவை அறிவிக்கிறோம். இனிமேல் துணைநிலை ஆளுநர் எடுக்கும் முடிவைப் பொருத்தது என்று முதல் அமைச்சர் நாராயணசாமி பேசியிருக்கிறார்.

Categories

Tech |