Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“புதுமணத் தம்பதிகள்” குடும்பத் தகராறில் எடுத்த விபரீத முடிவு…. பெரும் சோகம்….!!!

புதுமண தம்பதிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பெரியகுனிச்சி குறவர் காலனியில் சுதாகர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கும் பஞ்சணம்பட்டி பகுதியைச் சேர்ந்த ஆர்த்தி என்பவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பாக திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் சுதாகருக்கும்-ஆர்த்திக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த ஆர்த்தி கணவன் தூங்கிய நேரத்தில் ஒரு கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனையடுத்து மறுநாள் காலை சுதாகர் ஆர்த்தியை காணாததால் வீடு முழுவதும் தேடியுள்ளார். அதன்பிறகு தான் அக்கம்பக்கத்தினர் சுதாகரிடம் ஆர்த்தி கிணற்றில் பிணமாக கிடப்பதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து திருப்பத்தூர் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புத்துறையினர் ஆர்த்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் தன்னுடைய மனைவி இறந்த துக்கம் தாங்காமல் கணவரும் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த கந்திலி காவல்துறையினர் சுதாகரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஒரே நாளில் கணவன் மனைவி இருவரும் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |