Categories
மாநில செய்திகள்

புதுச்சேரி முதலமைச்சர் நலம் பெற வேண்டும்…. முதல்வர் மு.க.ஸ்டாலின்…..!!!!

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு அரசியல் பிரபலங்கள், திரையுலகினர் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அதுமட்டுமன்றி கொரோனாவால் தற்போது வரை திரையுலகினர் மற்றும் முக்கிய பிரபலங்கள் என அனைத்து தரப்பினரும் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கொரோனா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து மாண்புமிகு புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அவர்கள் நலமுடன் இருப்பதை அறிந்தேன் என்றும் அவர் விரைவில் முழு நலம் பெற்ற மக்கள் பணியை தொடர வேண்டுகிறேன் என்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா காலத்தில் அனைவரும் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

Categories

Tech |