புதுச்சேரி கதிர்காமம் தொகுதியில் என்.ஆர் காங்கிரஸ் வேட்பாளர் கே.எஸ்.பி ரமேஷ் வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அஸ்ஸாம், புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று முடிந்தது கடந்த மார்ச் 27ம் தேதி முதல் தேர்தல் தொடங்கியது. கேரளாவில் 140 சட்டசபை தொகுதிகளிலும், ஏப்ரல் 6-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்தது. இதையடுத்து அசாமில் 126 தொகுதிகளில் 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று முடிந்தது. புதுச்சேரி மாநிலத்தில் 30 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்தது. மேற்குவங்கத்தில் 294 தொகுதிகளில் 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று முடிந்தது.
புதுச்சேரி மாநிலத்தில் ஆரம்பம் முதலே என் ஆர் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகித்து வருகின்றது. இந்நிலையில் புதுச்சேரி கதிர்காமம் தொகுதியில் என்.ஆர் காங்கிரஸ் வேட்பாளர் கே.எஸ்.பி ரமேஷ் வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.