Categories
மாநில செய்திகள்

புதுச்சேரியில் ஜனாதிபதி ஆட்சி… மத்திய அமைச்சரவை ஒப்புதல்…!!!

புதுச்சேரியில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்னும் சில வாரங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கு மத்தியில் புதுச்சேரியில் எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்து வருவதால் காங்கிரஸின் பலம் குறைந்து கொண்டே வருகிறது. அதுமட்டுமன்றி  சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலையில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அமைச்சரவை பதவி விலகியது. துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை நேரில் சந்தித்து நாராயணசாமி தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.

இந்நிலையில் புதுச்சேரியில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த உள்துறை அமைச்சகத்துக்கு ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பரிந்துரை செய்தார். இந்த பரிந்துரையை ஏற்று ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தபடுவதை உள்துறை அமைச்சகம் விரைவில் முறைப்படி அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அதன்படி புதுவையில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சரவையின் பரிந்துரை குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு அடுத்த வாரம் முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கும். அரசு மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |