மத்திய ரிசர்வ் வங்கி மோசடிகள் நடப்பதை தடுப்பதற்காக கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு தொடர்பான விதிகளை மாற்றம் செய்து வருகிறது. இதனால் அண்மையில் டோக்கனைசேஷன் என்ற முறையை கொண்டு வந்தது. இதன் மூலமாக கிரெடிட் மற்றும் டெபிட் கார்ட் தகவல்களை பாதுகாக்க முடியும். இந்த முறையானது வரும் அக்டோபர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. தற்போது இந்த புதிய கிரெடிட் கார்டு வழங்கப்பட்ட பிறகு வாடிக்கையாளர்கள் அதனை 30 நாட்களுக்குள் ஆக்டிவேட் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இல்லாவிட்டால் வங்கிகள் கிரெடிட் பெற்ற வாடிக்கையாளர்களிடம் ஓடிபி வாயிலாக ஒப்புதல் பெற வேண்டும்.
அதன் பிறகு ஆக்டிவேட் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏழு நாட்களுக்குள் ஒப்புதல் வழங்கவில்லை என்றால் அதற்கு கிரெடிட் கார்டு ரத்து செய்ய வேண்டும். அதனை தொடர்ந்து கார்டு பெறும்போது வழங்கப்பட்ட கிரெடிட் கார்டு வரம்பை வாடிக்கையாளர்களின் அனுமதி இல்லாமல் மாற்றக்கூடாது. மேலும் செலுத்தப்படாத கட்டணங்கள் பிற கட்டணங்கள் கார்டுக்கான வரி போன்றவற்றை கூட்டு வட்டி மற்றும் கட்டணங்கள் விதிக்கப்படக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.