Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

புதிய செல்போன் வேண்டும்… சிறுவன் எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் மூழ்கிய பெற்றோர்…!!

செல்போன் வாங்கி தராததால் மாணவன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அடுத்துள்ள காவக்காரபட்டியில் வசித்து வரும் ஜெயராஜ் என்பவர் சொந்தமாக ஆம்னி வேன் வைத்து ஓட்டி வருகின்றார். இந்நிலையில் இவரது மகன் கவின்குமார் அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இதனையடுத்து கவின்குமார் புதிதாக செல்போன் வாங்கி தருமாறு தந்தையிடம் கேட்டுள்ளார். தற்போது செல்போன் வாங்கி தர முடியாது என ஜெயராஜ் கூறியுள்ளார். இதனால் மனமுடைந்த கவின்குமார் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதனையறிந்த பெற்றோர் அதிர்ச்சியடைந்து உடனடியாக நாமக்கலில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் கவின்குமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்து சென்ற எருமப்பட்டி காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |