Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்…. ஆசிரியர்கள் போராட்டம்…. குமரியில் பரபரப்பு…!!

ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவிலில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தின் முன்பாக இந்திய பள்ளி ஆசிரியர் சங்கத்தின் சார்பில் போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஹெர்பர்ட் ராஜா சிங் தலைமை தாங்கினார். இவர்கள் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமலுக்கு கொண்டுவர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். மேலும் இந்த போராட்டத்தில் வள்ளி வேல், வேலவன், சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Categories

Tech |