Categories
சென்னை மாவட்ட செய்திகள்

புதிதாக வாங்கிய வீட்டில் இறந்து கிடந்த “மத்திய அரசு அதிகாரி”…. நடந்தது என்ன…? போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ஆவடி கௌரி பேட்டை பகுதியில் பால்பாண்டி(58) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சி.வி.ஆர்.டி.இ- யில் அதிகாரியாக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு சாந்தி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகளும், ஒரு மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் பால்பாண்டி ஆவடி ஜே.பி எஸ்டேட் 4-வது தெருவில் புதிதாக ஒரு வீடு வாங்கியுள்ளார். அங்கு பழுது பார்க்கும் பணியால் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நேற்று முன்தினம் அந்த வீட்டிற்கு சென்ற பால்பாண்டி திரும்பி வரவில்லை. இந்நிலையில் பால்பாண்டி அவ்வபோது புதிதாக வாங்கி இருக்கும் வீட்டில் தங்குவது வழக்கம். இதனால் அவர் வீட்டிற்கு வராததை குடும்பத்தினர் கண்டுகொள்ளவில்லை.

நேற்று காலை அக்கம் பக்கத்தினர் வீட்டின் வராண்டாவில் ஈரத்துணி இடுப்பில் கட்டிய நிலையில், முகம் கருத்து பால்பாண்டி இறந்து கிடந்ததை பார்த்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் பால்பாண்டியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து அவர் இறந்த இடத்தில் செல்போன் மற்றும் சார்ஜர் வயர் தொங்கியபடி இருந்தது. எனவே இடுப்பில் ஈரத்துண்டு கட்டியபடி சார்ஜ் போட்டபடி செல்போனில் பேசியபோது பால்பாண்டி மின்சாரம் தாக்கி உயிரிழந்திருக்கலாம் என போலீசார் சந்தேகப்படுகின்றனர். ஆனால் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு தான் அவர் இறந்ததற்கான காரணம் தெரியவரும் என போலீசார் கூறியுள்ளனர்.

Categories

Tech |