Categories
தேசிய செய்திகள்

பீர் விலை அதிரடி உயர்வு…. மது பிரியர்கள் கடும் ஷாக்…!!!!

மாநிலத்தின் வருவாயை அதிகரிக்க மதுபானங்களின் விலையை 20-25% வரை தெலுங்கானா அரசு அதிரடியாக உயர்த்தி உள்ளது. தெலுங்கானாவில் அனைத்து வகை மதுபானங்களின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தின் ஆண்டு வருவாய் ரூ.6000 முதல் ரூ.7000 கோடி வரை அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அந்தவகையில், ரூ.495 மதிப்பிலான 1,000 மி.லி அளவு கொண்ட “புல்” மதுபாட்டிலின் விலை ரூ.120 அதிகரித்து ரூ.615 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், அனைத்து குவாட்டர் மதுபாட்டிலின் விலையும் ரூ.20 வரை அதிகரித்துள்ளது. மேலும், அனைத்து ‘பீர்’ வகைகளும் ஒரு பாட்டிலுக்கு குறைந்தது ரூ.10 முதல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

Categories

Tech |