தமிழக உயர்கல்வித்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் அரசு கல்வியியல் கல்லுாரிகள் மற்றும் அரசு உதவிபெறும் கல்லுாரிகளில் பி.எட்., மாணவர் சேர்க்கைக்கு அரசின் சார்பாக கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. இந்த நிலையில் சில பல்கலைகளை தவிர்த்து மற்றவற்றில் தேர்வு முடிவுகள் வெளியாகிவிட்டதால், தனியார் கல்லுாரிகளில் பி.எட்., சேர்க்கைக்கான முன்பதிவு பணிகள் தொடங்கியுள்ளது. இதற்கிடையில் அரசின் கவுன்சிலிங்கையும் தாமதம் இன்றி தொடங்க வேண்டும் என பட்டதாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் பி.எட் மாணவர் சேர்க்கை வழிகாட்டுதல் நெறிமுறைகளை உயர்கல்வித்துறை வெளியிட்டு இருக்கிறது.
# அனைத்துவகை கல்லூரிகளிலும் பி.எட் மாணவர் சேர்க்கையில் 69 சதவீத இட ஒதுக்கீடு கட்டாயம் ஆகும்.
# இணையதளம் மூலமாகவே மாணவர் சேர்க்கையானது நடத்தப்பட வேண்டும்.
# அரசு கல்வியியல் கல்லூரிகள், உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் சேருவதற்கு http://tngasaedu.in என்ற இணையதளத்தை அணுகலாம்.
# தனியார் கல்லூரிகளில் சேருவதற்கு அந்தந்த கல்லூரிகளின் இணையதளத்தை அணுகவும்.
# சான்றிதழ் சரிபார்ப்பின்போது அசல் சான்றிதழ்களை வைத்திருத்தல் அவசியம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.