Categories
உலக செய்திகள்

பிளீஸ்! தப்பிக்க வழி தேடி வரும்போது…. எல்லைகளை மூடாதீங்க…. ஐநா கோரிக்கை…!!

ஆப்கானிஸ்தான் நாட்டை தற்போது தாலிபான்கள் முற்றிலுமாக கைப்பற்றி விட்டனர். இதனால் தாலிபான் தலைமையிலான அரசு ஆப்கானை இன்னும் ஒரு சில நாட்களில் ஆட்சியமைக்கும்  என்பதனால் அங்குள்ள மக்கள் தங்கள் உயிருக்கு பயந்து வெளிநாடுகளுக்கு வெளியேறி வருகின்றனர். அவ்வாறு வெளியேறிய மக்கள் விமானங்களில் அடித்து பிடித்து ஏறும் வீடியோ வெளியாகி உலக நாடுகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதனால் உலக நாடுகள் அனைத்தும் ஆப்கான் மக்களுடைய நிலை குறித்து வருத்தம் தெரிவித்து வருகின்றன.

மேலும் அகதிகளாக வரும் அந்நாட்டு மக்களுக்கு அடைக்கலம் கொடுக்குமாறும் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் ஆப்கானில் இருந்து அகதிகளாக பாகிஸ்தான், ஈரான் உள்ளிட்ட நாடுகளின் எல்லையில் மக்கள் குவிகின்றனர். இது குறித்து ஐநா, ஆப்கான் மக்கள் அபாயத்தில் சிக்கி தவிக்கும் போது அவர்கள் வெளியேற வழி ஏதுமில்லை. அகதிகளாக வெளியேறும் மக்கள் தப்பிக்க வழி தேடி வரும்போது எல்லைகளை மூட வேண்டாம். மனிதநேய உதவிகளை மறுக்கக்கூடாது என்று கேட்டுக் கொண்டுள்ளது.

Categories

Tech |