Categories
மாநில செய்திகள்

பிளாட்பாரம் டிக்கெட்…. தெற்கு ரயில்வே திடீர் அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகிறார்கள்.

ஆனால் கடந்த 2 வாரமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன் காரணமாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி ஏப்ரல் 10 முதல் புதிய கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் மாநிலம் முழுவதும் கண்காணிப்பு பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இருந்தாலும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு உயிரிழப்பு எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.அதனால் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கொரோனா கட்டுப் பாடுகளுடன் கூடிய ஊரடங்கு இன்று முதல் தமிழகம் முழுவதும் அமலுக்கு வந்துள்ளது.

இந்நிலையில் சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல், அரக்கோணம், காட்பாடி, செங்கல்பட்டு மற்றும் தாம்பரம் ரயில் நிலையங்களில் கூட்ட நெரிசலை குறைக்க, வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உடன் வருபவர்களுக்கு மட்டுமே பிளாட்பாரம் டிக்கெட் வழங்கப்படும். இந்த நடைமுறை உடனே அமலுக்கு வருவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Categories

Tech |