12- ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவு, மறுகூட்டல் மதிப்பீடு முடிவுகள் நாளை காலை வெளியிடப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது. இதுபற்றி அரசு தேர்வுகள் இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் ஆகஸ்ட் 2021 -ல் நடைபெற்ற 12 ஆம் வகுப்பு துணைத் தேர்வு முடிவு, மறுகூட்டல் மறுமதிப்பீடு முடிவுகள் நாளை காலை 11 மணி அளவில் வெளியிடப்படுகிறது.
மறுமதிப்பீடு வேண்டி விண்ணப்பித்தவர்களில் மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்கள் தேர்வர்களின் பட்டியல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அக்டோபர் மாதம் 22ஆம் தேதி 2021 அன்று முற்பகல் 11 மணிக்கு வெளியிடப்படவுள்ளது. இந்தப் பட்டியலில் இடம்பெறாத தேர்வு எண்களுக்குரிய தேர்வர்களின் விடைத்தாள்களில் எந்தவித மதிப்பெண் மாற்றமும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மதிப்பெண்களில் மாற்றம் இருக்கின்ற தேர்வர்கள் மட்டும் மேலே குறிப்பிட்டுள்ள இணையதளத்தில் தங்களுடைய தேர்வு எண் மற்றும் பிறந்த தேதி போன்ற விவரங்களை பதிவு செய்து தங்களுக்கான திருத்தப்பட்ட மதிப்பெண்கள் அடங்கிய தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை உடனே பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்றும், அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் தேதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.