Categories
தேசிய செய்திகள்

பிளஸ் 2-தேர்வு எழுத….. ஆக்சிஜன் சிலிண்டருடன் சென்ற 50 வயது பெண்….. நெகிழ்ச்சி சம்பவம்….!!!!

கேரள மாநிலத்தின் முதியோர் கல்வி திட்டத்தில் ஏராளமான வயது முதிர்ந்த பெண்கள் கல்வி பயின்று வருகின்றனர். இதில் காட்டுதுருத்தி பகுதியை சேர்ந்த 50 வயது சிமி மோள் என்ற பெண் பிளஸ் டூக்கு சமமான கல்வி பயின்று வந்தார். இதற்கான தேர்வு கடந்த 14ஆம் தேதி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது. தேர்வுக்கு சில நாட்கள் இருந்த நிலையில் சிமி கடுமையான மூச்சு திணறல் ஏற்பட இதற்காக அவரை உறவினர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் அவர் பிளஸ் டூ தேர்வு எழுதயே தீருவேன் என்று உறுதியாக இருந்தார். இதை எடுத்து அவரது உறவினர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை அவரை ஆக்சிஜன் உதவியுடன் தேர்வு அறைக்கு அழைத்து வந்தனர். அவரது நிலைமையை பார்த்து தேர்வு அதிகாரிகள் சிமி மோள் தேர்வு எழுத தனி அறையை ஒதுக்கி கொடுத்தனர். அங்கு அவர் ஆக்சன் சிலிண்டர் உதவியுடன் தேர்வு எழுதினார். இதை பார்த்த பலரும் அதிர்ச்சி அடைந்தனர்.

Categories

Tech |