Categories
மாநில செய்திகள்

பிளஸ் 1 துணைத் தேர்வு….. இன்றே(செப்..13) கடைசி நாள்….. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பிளஸ் 1 துணைத் தேர்வு கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்து முடிந்தது.அந்த தேர்வு எழுதியவர்களில் விடைத்தாள் கோரி விண்ணப்பித்தவர்களின் நகல்கள் கடந்த செப்டம்பர் 9ம் தேதி வெளியிடப்பட்டது. இதனை மாணவர்கள் தேர்வு துறையின் www.dge.tn.gov.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்தனர்.அதன் பிறகு மறுகூட்டல் அல்லது மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் அதற்கான விண்ணப்பங்களை இந்த இணையதளம் மூலமாகவே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

அவ்வாறு பூர்த்தி செய்த விண்ணப்பங்களை செப்டம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் சம்பந்தப்பட்ட மாவட்ட தேர்வு துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். மேலும் மறு மதிப்பீட்டுக்கு 505 ரூபாய் மற்றும் மறு கூட்டலுக்கு உயிரியல் பாடத்திற்கு 305 ரூபாய் மற்றும் இதர பாடங்களுக்கு 205 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும் எனவும் அரசு தெரிவித்துள்ளது. இதற்கு இன்றே கடைசி நாள்.

Categories

Tech |