மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டத்திலுள்ள பொய்யாதநல்லூர் கிராமத்தில் அமர்நாத் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் அமர்நாத் தனது பிறந்தநாளை கொண்டாடுவதற்காக தாத்தாவான தங்கவேல் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது அரியலூரில் இருந்து அதிவேகமாக வந்த லாரி அமர்நாத்தின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த தங்கவேல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.
இதனை அடுத்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அமர்நாத்தை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முதியவரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.