Categories
தேசிய செய்திகள்

“பிறந்த இரண்டே நாளில்” குழந்தையை கொடூரமாக கொன்ற தாய்…. விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்….!!!

கேரளா பரமக்காவு பகுதியில் உள்ள கால்வாயில் நேற்று பச்சிளம் குழந்தையின் பிணம் கிடந்துள்ளதை பார்த்த ஒருவர் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், குழந்தையின் உடலை மீட்டு பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பரிசோதனையில் அந்த குழந்தை பிறந்து 2 நாட்களே ஆகி இருந்தது தெரியவந்தது. அதன் பின்னர் குழந்தையை கொன்று கால்வாயில் வீசிச் சென்றது யார்? என்று காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில் புழக்கல் பகுதியை சேர்ந்த மேகா என்ற இளம்பெண் சிக்கினார். அந்தப் பெண்ணிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அதில் அந்தப் பெண்ணும் அவரது கள்ளக்காதலனும் சேர்ந்து குழந்தையை கொன்றது தெரியவந்தது. இதுதொடர்பாக காவல் துறையினர் கூறியதாவது, மேகாவுக்கு திருமணம் ஆகவில்லை. அவர் அதே பகுதியை சேர்ந்த இமானுவேல் என்ற வாலிபரை 2 ஆண்டுகளாக காதலித்து வந்தார். இருவரும் நெருக்கமாக பழகி வந்ததால் கர்ப்பமானார். தான் கர்ப்பமானதை வீட்டுக்கு தெரியாமல் மேகா மறைத்துள்ளார். பிரசவ நாள் நெருங்கியதும், அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார்.

அங்கு கடந்த 19-ஆம் தேதி அன்று அவருக்கு குழந்தை பிறந்துள்ளது. குழந்தையுடன் வீட்டுக்குப் போனாள் மாட்டிக் கொள்வோம் என்பதால், மேகா குழந்தையை கொலை செய்ய முடிவு செய்துள்ளார். அதேபோன்று குழந்தை பிறந்த மறுநாளே மேகா அந்த குழந்தையை தண்ணீர் வாளியில் அமிக்கி கொன்றுவிட்டார். பின்னர் குழந்தையின் பிணத்தை பிளாஸ்டிக் கவரில் சுற்றி வீட்டுக்கு எடுத்து சென்றுள்ளார். மறுநாள் குழந்தையின் பிணத்தை காதலன் இமானுவேல் மற்றும் இன்னொரு நண்பரிடம் கொடுத்துள்ளார். அவர்கள் பிணத்தை அருகில் உள்ள கால்வாயில் வீசிச் சென்றுள்ளனர். இந்த நிலையில் காவல்துறையினர் மேகாவையும் அவரது காதலனையும் கைது செய்தனர். இவர்களுக்கு துணை போன நண்பரும் பிடிபட்டார். அவரிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |