Categories
தேசிய செய்திகள்

பிறந்தநாள் விருந்துக்கு சென்ற சிறுமிக்கு…. நடந்த கொடூர சம்பவம்…. அரசியல் பிரமுகரின் மகன் அதிரடி கைது……!!!!

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் கிராம பஞ்சாயத்து உறுப்பினரின் மகனால், 14 வயதுள்ள சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்ற திங்கட்கிழமை திரிணாமுல் காங்கிரஸ் பஞ்சாயத்து உறுப்பினர் சமர் கோலியின் மகன் சோஹல் தன் பிறந்தநாள் விழவை கொண்டாடினார். இந்த பிறந்தநாள் விழாவுக்கு 9ம் வகுப்பு பயிலும் சிறுமி சென்றுள்ளார். இதையடுத்து  பிறந்தநாள் விழா முடிந்து வீடு திரும்பியபோது பாதிக்கப்பட்ட சிறுமி கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார். உடனே அவர் உள்ளூர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சூழ்நிலையில், உள்ளூர் சுடுகாட்டில் அவசரமாக அவரது உடல் தகனம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அந்த பெண் தனியாக விருந்துக்கு சென்றாரா (அல்லது) சக நண்பர்களுடன் சென்றாரா என்று காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் பாதிக்கப்பட்ட பெண் விருந்தில் மது அருந்தும்படி வற்புறுத்தப்பட்டதாகவும், ஒரு பெண் மற்றும் அடையாளம் தெரியாத ஆண்களால் அவர் வீட்டில் இறக்கிவிடப்பட்டதாகவும் பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் சோஹல் சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார். அதனை தொடர்ந்து சோஹலை காவல்துறையினர் கைது செய்தனர். இதனிடையில் அவரது தந்தையும் திரிணாமுல் காங்கிரஸ் பிரமுகருமான சமர் தன் குடும்பத்தினருடன் தப்பி ஓடிவிட்டார். இந்த நிலையில் இச்சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

Categories

Tech |