இசையமைப்பாளர், நடிகர் என பன்முகங்களில் கலக்கும் விஜய் ஆண்டனியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் பிச்சைக்காரன் படத்தின் 2ஆவது பாகம் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த படத்தினை பாரம் படப்புகழ் பிரியா கிருஷ்ணசாமி இயக்க உள்ளார். சண்டைப்பயிற்சி இயக்குனராக மகேஷ் மேத்யுவும், ஒளிப்பதிவு தேனீ ஈஸ்வரும் தேர்வாகியுள்ளனர்.
இதுபற்றி திரைப்பட தயாரிப்பாளரும் விஜய் ஆண்டனியின் மனைவியுமான திருமதி பாத்திமா கூறியுள்ளது என்னவென்றால், எங்களின் அடுத்த கனவுப்படத்தை, பிச்சைக்காரன் 2 என்ற தலைப்பில் அறிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றோம். பிச்சைக்காரன் படத்தை தந்த இயக்குனர் சசிக்கு முதலில் எங்கள் நன்றி. எங்கள் பயணத்தை அதிக நம்பிக்கையோடு தொடர்கிறோம் என்று தெரிவித்தார்.