பிரேசிலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 41 லட்சத்தை எட்டியுள்ளதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி ஏராளமான உயிர் பலிகளை வாங்கிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் பிரேசிலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 41 இலட்சத்தை எட்டியுள்ளது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 31 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதனால் தற்போது வரை கொரோனாவால் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40.91 லட்சத்தை தாண்டியுள்ளது. மேலும் ஒரே நாளில் 600-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ள நிலையில், தற்போது வரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1.26 லட்சத்தை கடந்துள்ளது. அதே சமயத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 33 லட்சத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.