கத்திரிக்காய் குருமா செய்ய தேவையான பொருட்கள்:
கத்தரிக்காய் – 1/4 கிலோ
கேரட் – 3
குடை மிளகாய் – 3
பச்சை பட்டாணி – 3/4 கப்
பெரிய அளவு வெங்காயம் – 2
தக்காளி – 3
பச்சை மிளகாய் – 6
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 3 தேக்கரண்டி
தயிர் – 3 மேஜைக்கரண்டி
பட்டை – 3
கிராம்பு – 3
ஏலக்காய் – 3
மஞ்சள்தூள் – 1/2 தேக்கரண்டி
தனியாத்தூள் – 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 1/2 தேக்கரண்டி
தேங்காய் பால் – 1/2 கப்
எண்ணெய் – 2 மேஜைக்கரண்டி
உப்பு – 2 அரை தேக்கரண்டி
செய்முறை:
முதலில் கத்தரிக்காய் 1/4 கிலோ, கேரட் 3, குடை மிளகாய் 3 ஆகியவற்றை பொடியாக வெட்டிக் கொள்ளவும்.
பின் பட்டை, கிராம்பு, ஏலக்காயை போட்டு மிக்ஸியில் சேர்த்து அரைத்து கொள்ளவும். பின்பு வெங்காயம் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
அதன்பின் இஞ்சிப்பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசம் போகும் வரை கிளறி விடவும். பிறகு நறுக்கிய கத்தரிக்காய், கேரட் சேர்த்து வதக்கவும்.
தொடர்ந்து, தயிர் மற்றும் மஞ்சள்தூள் சேர்த்து வதக்கி, பின் தண்ணீர் வற்றியதும் அதனுடன் தக்காளி சேர்த்து வதக்கவும்.
பிறகு தனியாத்தூள், மிளகாய்த்தூள், குடைமிளகாய் மற்றும் பச்சை பட்டாணி, நான்கு கப் தண்ணீர், உப்பு என அனைத்தையும் சேர்த்து கிளறவும்.
இறுதியில் காய்கள் வெந்ததும், தேங்காய்ப்பால் ஊற்றி 1 கொதி வந்தவுடன் இறக்கி பரிமாறவும். இப்போது சூப்பரான கத்தரிக்காய் குருமா ரெடி.