Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

பிரியாணி கடை உரிமையாளரின் சடலம் மீட்பு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…. போலீஸ் விசாரணை…!!

பிரியாணி கடை உரிமையாளர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கீர்த்தனா நகர் பகுதியில் ஆணின் சடலம் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் இறந்து கிடந்த நபரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அவருக்கு அருகில் மது பாட்டில்கள் மற்றும் விஷ பாட்டில் ஆகியவை கிடந்துள்ளது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட நபர் நன்னை நடு தெருவில் வசிக்கும் சேகர் ராஜூ என்பது தெரியவந்துள்ளது.

இவருக்கு சரிதா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் இருக்கின்றனர். இதில் சேகர் ராஜு 4 ரோடு புதிய பேருந்து நிலையம் அருகில் மூன்று இடங்களில் பிரியாணி கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடை ஊழியர்களிடம் சிறுவாச்சூர் சென்று வருவதாக கூறிவிட்டு புறப்பட்ட சேகர் நீண்ட நேரம் அங்கேயே கடைக்கு திரும்பி வரவில்லை. இதனையடுத்து சேகர் ராஜூ குடும்ப பிரச்சனை காரணமாக மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |