குடும்ப பபிரச்சனையில் ஆண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் பகுதியில் ராஜேந்திரகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும் இவரது மனைவி பிரியதர்ஷினிக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பிரியதர்ஷினி கடந்த 2-ஆண்டுகளாக ராஜேந்திரகுமாரை விட்டு பிரிந்து தனது தந்தை வீட்டில் வசித்து வருகிறார். இதனால் மன உளைச்சலில் இருந்த ராஜேந்திர குமார் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து ராஜேந்திரகுமாரின் தாயார் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் ராஜேந்திரகுமாரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.