பிரிட்டிஷ் ஊடகவியலாளரான பியர்ஸ் மோர்கன், இளவரசர் ஹரி -மேகனின் தொலைக்காட்சி நேர்காணல் மகாராணிக்கும் ,அரச குடும்பத்திற்கும் அவர்கள் இழைத்த துரோகம் என்று விமர்சித்துள்ளார்.
பிரிட்டன் இளவரசர் ஹரி-மேகன் தம்பதியர் அரச குடும்ப பதவியிலிருந்து விலகிய ஒரு வருடத்திற்கு பின்பு ஓபரா வின்பிரே உடனான தொலைக்காட்சி நேர்காணல் ஒன்று பேட்டி அளித்தனர். அதில் தங்கள் இருவருக்கும் அரசு குடும்பத்தில் ஏற்பட்ட கசப்பான சம்பவங்களை பகிர்ந்தனர். இதுகுறித்து பிரபல பிரிட்டிஷ் ஊடகவியலாளரான பியர்ஸ் மோர்கன் டுவிட்டரில், இந்த பேட்டி மஹாராணி மற்றும் அரச குடும்பத்திற்கு இழைக்கப்படும் துரோகம் என்று கூறியுள்ளார்.
Let’s be clear: Prince Harry and his wife just spent two hours trashing everything the Queen stands for & has worked so hard to maintain, whilst pretending to support her.
And they did it while her 99yr-old husband Philip is seriously ill in hospital.
It’s contemptible. pic.twitter.com/W8dBoNI7d8— Piers Morgan (@piersmorgan) March 8, 2021
மகாராணியையும் அவர்களின் குடும்பத்தையும் இதுபோன்ற ஹரி-மேகன் தம்பதியர் அசிங்கப்படுத்துவது குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார். ஹரி முன்பே மேகன் இவ்வாறு குடும்பத்தை அசிங்கப்படுத்துவதை ஹரி அனுமதிப்பது தவறானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
This interview is an absolutely disgraceful betrayal of the Queen and the Royal Family. I expect all this vile destructive self-serving nonsense from Meghan Markle – but for Harry to let her take down his family and the Monarchy like this is shameful. #OprahMeghanHarry pic.twitter.com/F2QDxELSsr
— Piers Morgan (@piersmorgan) March 8, 2021
மகாராணியின் 99 வயதான கணவர் பிலிப்ஸ் மருத்துவமனையில் இருக்கும் நிலையில் இவ்வாறு இவர்கள் இரண்டு பேரும் பேட்டி அளித்தது இழிவானது என்றும் பியர்ஸ் மோர்கன் தெரிவித்துள்ளார்.