நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகிவரும் ராதே ஷ்யாம் படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
பாகுபலி என்ற படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமடைந்தவர் பிரபாஸ். இதை தொடர்ந்து இவர் நடிப்பில் சாஹோ திரைப்படம் வெளியாகியிருந்தது. தற்போது நடிகர் பிரபாஸ் சலார், ராதே ஷ்யாம், ஆதிபுருஷ் ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இதில் ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் ராதே ஷ்யாம் படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். யூவி கிரேஷன்ஸ் இந்த படத்தை தயாரித்து வருகிறது.
மேலும் இந்த படம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் ரிலீஸாக இருக்கிறது. இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ராதே ஷ்யாம் படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.