Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் வெள்ள பாதிப்பால் 903 பேர் உயிரிழப்பு….. மந்திரி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்….!!!!

பாகிஸ்தானில் பருவ மழை மற்றும் வெள்ள பெருக்கின் காரணமாக ஜூன் மாதத்தில் இருந்து குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட 903 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டின் பருவநிலை மாற்றத்துறை மந்திரி ஷெர்ரி ரஹ்மான் தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து பாகிஸ்தான் முழுவதும் மழை பெய்து வருவதால் பல்வேறு சம்பவங்களில் 1,293 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என்று ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். பருவமழை மற்றும் வெள்ளத்திற்கு அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் சிந்து மற்றும் பலுசிஸ்தான் மாகாணங்களில் பதிவாகியுள்ளது.

அதுமட்டுமில்லாமல் ஒரு கோடி மக்கள் வீடுகளை இழந்து இடம் பெயர்ந்து உள்ளனர். மேலும் 1.5 மில்லியனுக்கு அதிகமான மண் வீடுகள் முற்றிலும் அழிக்கப்பட்டு விட்டது என்று அவர் தெரிவித்துள்ளார். இது பிரிவுக்கான நேரம் அல்ல, ஒற்றுமைக்கான நேரம். நான் சமாளிக்க வேண்டும், மனிதாபிமானம் நெருக்கடியை ஒரே தேசமாக ஒன்றுபட்டு நின்று வெல்வோம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |