ஆப்பிரிக்கா நாட்டின் லிபியாவின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள பென்ட் பய்யா நகரில் டீசல் ஏற்றிக்கொண்டு டேங்கர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி நிலை தடுமாறி சாலையின் நடுவே கவிழ்ந்தது. இதனையடுத்து டேங்கரில் இருந்த டீசல் சாலையில் கொட்டியது. அதனை பார்த்த வாகன ஓட்டிகள் மற்றும் ஊர் மக்கள் ஆபத்தை உணராமல் டீசலை சேகரிக்க கோவிந்தனர். அவர்கள் போட்டி போட்டுக்கொண்டு டீசல் சேகரித்துக் கொண்டிருந்தபோது கவிழ்ந்து கிடந்த டேங்கர் லாரி திடீரென வெடித்து சிதறியது.
இதில் டீசல் லாரியும் சாலையில் நின்று கொண்டிருந்த ஏராளமான வாகனம் தீக்கிரையாகியது . இந்த விபத்தில் 9 பேர் உயிர் இழந்தனர். மேலும் 70க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று அஞ்சப்படுகிறது.