Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டின் முன்னாள் அதிபருக்கு…. கொரோனா தொற்று உறுதி…. வெளியான தகவல்….!!

பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தார் ஆவார். இவருக்கு கொரோனா நோய் தொற்று  நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவருக்கு வயது 67 ஆகிறது. இது குறித்து அவரது மகனும், அந்த நாட்டின் வெளியுறவு மந்திரியுமான பிலாவல் பூட்டோ கூறியதாவது, “ஆசிப் அலி சர்தாரி கொரோனாவுக்கு எதிராக 2 “டோஸ்” தடுப்பூசிகள் மட்டுமின்றி “பூஸ்டர்” டோசும் செலுத்திக்கொண்டுள்ள நிலையில் இந்த கொரோனா தொற்றால்  பாதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது கொரோனா பாதிப்புக்குள்ளாகி உள்ள அவருக்கு லேசான அறிகுறிகள் காணப்படுவதாகவும், சிகிச்சை பெற்றுவருவதாகவும்” அவர் கூறியுள்ளார். மேலும் பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 761 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Categories

Tech |