அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் தொலிடோ எனும் நகரில் உயர்நிலைப் பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இந்த பள்ளியில் பள்ளியில் கால்பந்து போட்டிகள் நடத்தப்பட்டுள்ளது. இதில் அந்த பள்ளிக்கும் மத்திய கத்தோலிக்க உயர்நிலைப் பள்ளிக்கும் இடையே நேற்று இரவு போட்டி ஒன்று நடத்தப்பட்டுள்ளது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் மூன்றாவது சுற்று முடிவடைந்து அடுத்த சுற்றுக்கு சென்றுள்ளது. அதனால் போட்டி நடைபெற்ற பகுதியில் பரபரப்புடன் காணப்பட்டுள்ளது. இந்த நிலையில் பள்ளியின் கால்பந்து போட்டி நடத்தப்பட்ட பகுதிக்கு வெளியே திடீரென துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்றுள்ளது.
இந்த துப்பாக்கி சூடு சம்பவம் பற்றி தொலிடோ காவல்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது நேற்று இரவு 9:32 மணி அளவில் போட்டி நடைபெற்ற பகுதியில் இருந்த காவல்துறை அதிகாரி ஒருவர், லூகாஸ் கவுண்டி காவலர்களுக்கு, விட்மர் நினைவு மைதானத்தில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்று உள்ளது என கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சி நடத்துபவர்கள் போட்டியாளர்கள் போன்றோரை பாதுகாப்புடன் வெளியேற்றும் பணியில் அந்த அதிகாரி ஈடுபட்டிருக்கின்றனர்.
இந்த தாக்குதலில் இரண்டு முதியவர்கள் மற்றும் இளைஞர்கள் ஒருவர் என மொத்தம் மூன்று பேர் காயமடைந்து கால்பந்து மைதானம் அருகே கிடந்துள்ளனர். இந்த சம்பவம் பற்றி அறிந்து தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் உடனடியாக சென்று காயம் அடைந்த நபர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் சம்பவ இடத்தில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு குவிக்கப்பட்டுள்ளது இதுவரை சம்பவத்துடன் தொடர்புடைய நபர் பிடிபடவில்லை. அவரைப் பற்றிய தகவல் தெரிவிப்பவர்களுக்கு 4 லட்சம் வரை பரிசளிக்கப்படும் என போலீஸர் கூறியுள்ளனர் மேலும் தொடர்ந்து விசாரணை தீவிர படுத்தப்பட்டு இருக்கிறது.