திருவனந்தபுரத்தில் நடிகை மாலா பார்வதியின் தாயார் கே லலிதா வியாழக்கிழமை காலை பட்டத்தில் உள்ள எஸ்யூடி மருத்துவமனையில் காலமானார். கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு ஜூலை 12 முதல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இத்தகவலை மாலா பார்வதி தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார். அவரது மறைவுக்கு திரையுலகினர், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
நடிகை மாலா பார்வதி, மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழில், இது என்ன மாயம், நிலம் நீர் காற்று, நிமிர், கேணி, கேம் ஓவர், மாறா, எப்.ஐ.ஆர். உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.