தமிழ் சினிமாவில் நினைத்தாலே இனிக்கும், யுவன்-யுவதி, ஹரிதாஸ், வாகா படங்களை இயக்கிய ஜி.என்.ஆர் குமாரவேலன் தற்போது சினம் படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் அருண் விஜய் கதாநாயகனாகவும், பாலக் லால்வாணி கதாநாயகியாக நடித்திருக்கிறார். இந்தப் படத்தின் பின்னணி இசையை ஷமீர் இசையமைத்துள்ளார். ஆக்ஷன் படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தில் அருண் விஜய் இன்ஸ்பெக்டராக பாரி வெங்கட் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் வருகின்ற செப்டம்பர் 16ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் சினம் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் திரைத்துறையினர், படக்குழு என பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சி நடிகர் விஜய் ஆண்டனி கூறியது, நடிகர் அருண் விஜய் உடன் நடிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. ஒரு சிறந்த நடிகருடைய நடிப்பை நேரில் பார்த்த சந்தோசம் எனக்கு கிடைத்தது. அவர் இன்னும் நிறைய உயரத்திற்கு செல்ல வேண்டும் அவருக்கு நிறைய திறமைகள் இருக்கிறது. அவருடைய பாட்டு திறமையை பாராட்டியை ஆக வேண்டும். இவ்வளவு நன்றாக பாடுவார் என எனக்கே தெரியாது. இயக்குனர் குமாரவேலன் திறமையான இயக்குனர் அவருடன் 3ப்படங்கள் பணியாற்றியுள்ளேன். அவர் சிறந்த ஒளிப்பதிவாளரும் கூட, அவர் இந்த படத்தில் சிறப்பான பணியை கொடுத்துள்ளார். மேலும் இந்த படம் செப்டம்பர் 16ஆம் தேதி வெளியாக உள்ளது .எனவே அனைவரும் படம் பாருங்கள் என்று தெரிவித்துள்ளார். அதனைதொடர்ந்து இயக்குனர் பார்த்திபன் கூறியது, அருண் விஜய் வெற்றியை சந்திக்க பல காலம் ஆகியது. அவர் தனிப்பட்ட உழைப்பினால் மட்டுமே முன்னேறிய ஒருவர். மேலும் இந்த படத்தில் இசையமைப்பாளர் சபீர் உடைய பாடல் மயக்கும் அளவில் இருக்கின்றது. தயாரிப்பாளர்களுக்கும் இயக்குனர்களுக்கும் எனது வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.