தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் நடிகர் சூர்யாவுக்கு சூரரை போற்று திரைப் படத்திற்காக சமீபத்தில் தேசிய விருது வழங்கப்பட்டது. இவர் நடிப்பில் வெளியான எதற்கும் துணிந்தவன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், விக்ரம் திரைப்படத்தில் நடித்த ரோலக்ஸ் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்நிலையில் நடிகர் சூர்யா தற்போது வாடிவாசல் மற்றும் வணங்கான் உள்ளிட்ட திரைப்படங்களில் தற்போது நடித்து வருகிறார். அதோடு சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா 42 திரைப்படத்திலும் நடிக்கவுள்ளார்.
இதனையடுத்து வணங்கான் திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது பாலாவுடன் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக சூர்யா உடனடியாக சென்னைக்கு கிளம்பி வந்து விட்டதாக தகவல் வெளியானது. இந்த தகவலை படக்குழுவினர் மறுத்தாலும், வணங்கான் திரைப்படத்தின் சூட்டிங் தொடங்கப்படாமல் இருந்தது ரசிகர்கள் மத்தியில் பெரிய குழப்பத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த குழப்பத்தை தீர்க்கும் விதமாக இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தன்னுடைய twitter பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் வணங்கான் திரைப்படத்தின் பாடல் பதிவு வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தகவலால் சூர்யா ரசிகர்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.
#vanangaan songs recording on progress 🔥🔥🔥 … @Suriya_offl @rajsekarpandian #directorbala
— G.V.Prakash Kumar (@gvprakash) September 11, 2022