பிரபல தமிழ் நடிகையின் மகன் உயிரிழந்த நிலையில் தற்போது அவரது கணவரும் கொரோனா காரணமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள நடிகை கவிதா என்பவரின் மகன் சாய் ரூப். இவர் கடந்த 15ஆம் தேதி கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து அவரது கணவரும் கொரோனா காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். முதலில் மகன் இறந்த துக்கத்தை தாங்க முடியாமல் இருந்த நடிகை கவிதாவிற்கு, தற்போது கணவன் இறந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவருக்கு பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.