Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல இசையமைப்பாளர் அனிருத் வீட்டில் இரங்கல் செய்தி…. சோகத்தில் குடும்பத்தார்…!!!!

இயக்குனரும், இசையமைப்பாளரும் , இசையமைப்பாளர் அனிருத்தின் தாத்தாவுமான எஸ். வி ரமணன் வயது முதுமையின் காரணமாக காலமானார். தமிழ் சினிமாவில் பல படங்களை 1930 முதல் 40 களில் இயக்கி புகழ் பெற்றவர் சுப்பிரமணியன். இவருடைய மகன் எஸ்.வி ரமணன். இவர் சினிமாவில் பல துறைகளில் தனித்து நின்று தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்திருந்தார். இவர் பல ரேடியோ விளம்பரங்களுக்கும் குரல் கொடுத்துள்ளார். ஆன்மீகம் சம்பந்தப்பட்ட ஆவணப்படங்களையும் தயாரித்துள்ளார்.

இந்நிலையில் சென்னையில் வசித்து வந்த எஸ்.வி ரமணன் வயது மூப்பின் காரணமாக இன்று காலமானார். இவருக்கு பாமா என்ற மனைவியும் லட்சுமி, சரஸ்வதி என்று இரண்டு மகள்களும் உள்ளனர். இவர்களின் லட்சுமியின் மகன் தான் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக உள்ள அனிருத் என்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |