பிரதமர் மோடியின் தனிப்பட்ட டுவிட்டர் கணக்கு ஹேக்கர்களால் முடக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி டிவிட்டரில் சிறந்த தலைவர்களில் ஒருவர். அவர் கடந்த 2009 ஆம் ஆண்டு ட்விட்டரில் narendramodi_in என்ற தனிப்பட்ட கணக்கை உருவாக்கியுள்ளார். தற்போது அவரின் தனிப்பட்ட ட்விட்டர் கணக்கை ஹேக்கர்கள் முடக்கியுள்ளனர்.
மோடியின் டுவிட்டர் கணக்கை பிட்காயின் மூலமாக பணம் செலுத்துபவர்கள் முடக்கியுள்ளதாக ட்விட்டர் நிறுவனம் உறுதி செய்துள்ளது. இந்த சம்பவம் பற்றி அதிகாரிகள் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.